Sunday, October 2, 2011

கைப்பேசி என்னும் காதல் கத்தி!



உந்தன் பதில் குருஞ்செய்திக்கான
நொடிகளின் காத்திருப்பில்
மரணத்தை ருசிக்கவைக்கிறாய்..



கிளர்ச்சி என்பது
தீண்டலில் மட்டும் அல்ல
என்பதை புரிய வைத்தது
நீ கொடுத்த முத்தங்களின் 
சத்தங்கள்!


முரடர்களையும் கைபேசி 
முனையில்
முனுமுனுக்க வைக்கின்றது
காதல்!


இரவில் பேசிக்கொண்டே
துங்கிவிடும் நாட்களில்
எனது கனவுகளை 
நீர்த்துபோக செய்கின்றன
உந்தன் இடையில் தவழும்
கைபேசி!



3 comments:

Prabha said...

Nice Kavithaikal machchan

ப்ரியா... said...

tholanjada.. kaila matuna...

Marc said...

அருமைக் கவிதைகள்.