Saturday, August 30, 2008

அழகிய ராட்சசி!

உன் நகங்கள் தான்
எனக்கு நிலா!
உன்னொடு இருக்கையில்
அவைகள் வளர்பிறை..
உன்னொடு நான் இருக்கையில்
அவைகள் தேய்பிறை....



பாட்டி சொன்ன கதையில்
ராட்சசிகள் தான் அதிகம்
நகம் வைத்திருப்பார்களாம்....
அப்படிப்பார்த்தால்
நீதான் எந்தன் அழகிய ராட்சசியடி!

திட்டிக்கொண்டே இருக்கிறாய்...

"நகம் கடிக்கும் பழக்கத்தை
எப்பொழுது விடப்போகிறாய்?" என...
என் கேள்விக்கு பதில் சொல்!
"நகம் வளர்க்கும் பழக்கத்தை
நீ எப்பொழுது விடப்போகிறாய்?"

Wednesday, June 4, 2008

மெளனமொழி......

இலையுதிர் காலம் அது... இல்லை இல்லை என் கல்லூரி மரங்கள்
இலையுதிர்த்து தங்கள் கண்டனங்களை தெரிவித்து
கொண்டிருந்தன..... வெள்ளிகிழமையின் மாலைப்பொழுது!


இன்னுமிரண்டு நாட்களுக்கு உன்னை காணமுடியாதே என்றகின்ற
வருத்தங்களோடு கடைசி மேஜையில் கவிதை கிருக்கி
கொண்டிருப்பேன்....இதோ கடைசி வகுப்பு முடிந்ததற்காண
மணியோசையும் கேட்டாகிவிட்டது....

கல்லூரி விடுதியில் தங்கும் நீ விடுமுறைக்கு வீடு திரும்பும் தருணம்
இது! என் வழித்தட பேருந்துகள் வரிசையாக சென்று
கொண்டிருந்தாலும்,துணைக்கு ஒரு நண்பனை பிடித்து வைத்து நீ வரும்
வரை காத்திருப்பேன் சின்னப்பாலம் மேல் அமர்ந்து.உண்மையில் அந்த
பாலம் எனக்கு நண்பனாகிவிட்டது....பலரோடு என்னையும் என் காதலையும் வெகுகாலம் தாங்கியிருந்ததால்!


இனியும் உன்னைக்கான முடியாது என்ற வருத்தங்களுடன் சூரியன்
மறைந்துவிட....வெண்ணிலாவிற்க்கு போட்டியாக சின்ன
களைப்போடு,சிறிய அலங்காரத்தோடு வெளியே வருவாய்.விருப்பமே
இல்லாமல் வழிவிடும் விடுதி கதவுகள்.......





மூன்றாம் வருட இறுதி வரை நீ என்னுடன் பேசியதில்லை
என்றாலும்,உன் கண்கள் என்னுடன் பேசியவை அதிகம்! நான்
காத்திருப்பேன் என்பது தெரிந்தும் ,நான் பார்க்கும் முன் என்னை
தேடிவிட்டு,நான் பார்க்கும் போது என்னை இதுவரை பார்த்ததே
இல்லாதது போல் தலைகுனிந்து கொள்வாய்!


உடனடியாகவா வரவேண்டும் உன் வழித்தட பேருந்து?.. உன் தோழி என்னை காட்டி கிண்டலடிப்பதை பார்த்து அவளை முறைத்துவிட்டு,எதிர் வரும் உன் பேருந்தை பார்ப்பது போல் காத்திருந்ததற்க்கான பரிசாக பார்க்காதது போல் என்னயும் பார்த்துவிட்டு கிளம்பிவிடுவாய்!இவ்வளவு நேரம் காத்திருந்ததற்க்கு எதோ சாதித்த உணர்வோடு நானும் வீடு திரும்புவேன்...


நீ விட்டுப்போன வெட்கங்களையும்,பார்வைகளையும் கண்டெடுக்க கடந்த மாதம் நடந்த பட்டமளிப்பு விழாவிற்க்காக கல்லூரிக்கு சென்ற பொழுது,என் தம்பிகளிடம் இடம் கேட்டு அமர்ந்தேன் சின்னப்பாலம் மீது! நான்கு வழிச்சாலை வரும் காரணத்திற்காக சின்னப்பாலம் இடிக்கப்பட போவதாக கேள்விப்பட்டு வருத்தங்களோடு அமர்ந்திருக்கையில்,கவனிக்க முடிந்தது மற்றுமொரு காத்திருத்தலையும்,ஒரு மெளனமொழி உரையாடலையும் எனது இளைய தலைமுறையிடம்!




மெளனத்தைவிட
அழகான மொழி
இருக்க முடியுமா
காதலுக்கு?

Thursday, April 10, 2008

நீ எழுந்து போன பின் (II)

உன்னால் உருவான
உலகம் இது
நீ வந்தால்
மட்டுமே இயங்கும்..


ஆய்வுக்கூடத்தில்
அதிகநேரம்
அமராதே
கணிணிகளும்
கண்ணடிக்கின்றன
கன்னி உன்னைக் கன்டு!





குளத்தங்கரைக்கு
குளிக்க வருகிறாய்
அழுக்கை தின்னும் மீன்கள்
இன்று அழகை தின்ன போகின்றன!




தினமும் தண்ணீர்
எடுக்க ஆற்றங்கரைக்கு
நீ வருவதால்,
வற்றாமல் ஓடுகிறது
என் காதல் நதி!

நீ பேருந்து ஏறி போன
பின்னும் நின்ற் கொண்டே
இருக்கிறது எனக்கான
உன் வெட்கம் மட்டும்..



மருதாணி இலைகளும்
சிவக்கின்றன
உன் விரல்
தீண்டல்களில்!

உன் கொலுசு
சிதறி விட்டு போன சத்தம்
என்னுள் கேட்டுகொண்டே இருக்கிறது
உன் கால்மிதி தடம்
அழியும்வரை..




தையல் படிக்க போகிறாய்
என்றுதான் நினைத்திருந்தேன்
எங்கே படித்தாய்
என் மனதை தைத்து விட்டு போக..





சூரியனை கண்டு
முகம் நிமிரும் சூரியகாந்தி,
உன்னை கண்டதும்
நிமிர்ந்து கொள்கிறது
என் காதல்..


நீ எழுந்து போன பின்
உன் இருக்கையில்
வாடிக்கிடக்கும்
உதிர்ந்த மல்லிகை பூக்கள் சொல்லும்
என் காதலை!



Monday, March 31, 2008

நீ எழுந்து போன பின்.....







அமைதியாய்
என்னைக்கடந்து செல்கிறாய்....
அமர்க்களப்படுகிறது
என் இதயம்.........





தினம் தினம்
அழகை அதிகரித்து கொள்கிறது
நகர பேருந்து
நீ ஏறி வருவதால்..........


தங்கச் சரிகையில்
வெள்ளி நிலா!
ஓணத்து பட்டு புடவையில்
நீ!




சிரிக்கிறயா?
என்னை
சிதறடிக்கிறாயா?



உன் விழி
அம்புகள்
என் இதயத்தில் பாய்ந்தன...
உதிரமாக வழிகிறது
காதல்.......




தேர் உலாவால்
விழா ஊருக்கு.....
தேவதை உன் உலாவால்
திருவிழா எனக்கு...



உன்னை அலங்கரிப்பதாய்
நினைத்து கொள்கிறாய்
உண்மையில் தங்களை
அலங்கரித்து கொள்கின்றன
அணிகலன்கள்..



கோவிலை சுற்றுகிறாய்...
உன்னை சுற்றுகிறேன்...
நோக்கம் இருவருக்கும் ஒன்றுதான்
அம்மன் அருள்!



தூரத்தில் கடக்கும் போதும்
தூரல்களாய் உன் பார்வை
தளிர்க்கிறது என் காதல்..



உன்னோடு பேச
நான் கற்றுக்கொண்ட
ஒரே மொழி
மெளனம்.
சில நேரங்களில்
பார்வைகள்..


கொடி கட்டுவதற்காக
கொல்லையில் வளர்ந்தது
சாதாரன தென்னை தான்.
ஆனால் உன் தாவனி
காய்ந்ததில் காய்த்தது
அனைத்தும் செவ்விளனியே...