Wednesday, June 4, 2008

மெளனமொழி......

இலையுதிர் காலம் அது... இல்லை இல்லை என் கல்லூரி மரங்கள்
இலையுதிர்த்து தங்கள் கண்டனங்களை தெரிவித்து
கொண்டிருந்தன..... வெள்ளிகிழமையின் மாலைப்பொழுது!


இன்னுமிரண்டு நாட்களுக்கு உன்னை காணமுடியாதே என்றகின்ற
வருத்தங்களோடு கடைசி மேஜையில் கவிதை கிருக்கி
கொண்டிருப்பேன்....இதோ கடைசி வகுப்பு முடிந்ததற்காண
மணியோசையும் கேட்டாகிவிட்டது....

கல்லூரி விடுதியில் தங்கும் நீ விடுமுறைக்கு வீடு திரும்பும் தருணம்
இது! என் வழித்தட பேருந்துகள் வரிசையாக சென்று
கொண்டிருந்தாலும்,துணைக்கு ஒரு நண்பனை பிடித்து வைத்து நீ வரும்
வரை காத்திருப்பேன் சின்னப்பாலம் மேல் அமர்ந்து.உண்மையில் அந்த
பாலம் எனக்கு நண்பனாகிவிட்டது....பலரோடு என்னையும் என் காதலையும் வெகுகாலம் தாங்கியிருந்ததால்!


இனியும் உன்னைக்கான முடியாது என்ற வருத்தங்களுடன் சூரியன்
மறைந்துவிட....வெண்ணிலாவிற்க்கு போட்டியாக சின்ன
களைப்போடு,சிறிய அலங்காரத்தோடு வெளியே வருவாய்.விருப்பமே
இல்லாமல் வழிவிடும் விடுதி கதவுகள்.......





மூன்றாம் வருட இறுதி வரை நீ என்னுடன் பேசியதில்லை
என்றாலும்,உன் கண்கள் என்னுடன் பேசியவை அதிகம்! நான்
காத்திருப்பேன் என்பது தெரிந்தும் ,நான் பார்க்கும் முன் என்னை
தேடிவிட்டு,நான் பார்க்கும் போது என்னை இதுவரை பார்த்ததே
இல்லாதது போல் தலைகுனிந்து கொள்வாய்!


உடனடியாகவா வரவேண்டும் உன் வழித்தட பேருந்து?.. உன் தோழி என்னை காட்டி கிண்டலடிப்பதை பார்த்து அவளை முறைத்துவிட்டு,எதிர் வரும் உன் பேருந்தை பார்ப்பது போல் காத்திருந்ததற்க்கான பரிசாக பார்க்காதது போல் என்னயும் பார்த்துவிட்டு கிளம்பிவிடுவாய்!இவ்வளவு நேரம் காத்திருந்ததற்க்கு எதோ சாதித்த உணர்வோடு நானும் வீடு திரும்புவேன்...


நீ விட்டுப்போன வெட்கங்களையும்,பார்வைகளையும் கண்டெடுக்க கடந்த மாதம் நடந்த பட்டமளிப்பு விழாவிற்க்காக கல்லூரிக்கு சென்ற பொழுது,என் தம்பிகளிடம் இடம் கேட்டு அமர்ந்தேன் சின்னப்பாலம் மீது! நான்கு வழிச்சாலை வரும் காரணத்திற்காக சின்னப்பாலம் இடிக்கப்பட போவதாக கேள்விப்பட்டு வருத்தங்களோடு அமர்ந்திருக்கையில்,கவனிக்க முடிந்தது மற்றுமொரு காத்திருத்தலையும்,ஒரு மெளனமொழி உரையாடலையும் எனது இளைய தலைமுறையிடம்!




மெளனத்தைவிட
அழகான மொழி
இருக்க முடியுமா
காதலுக்கு?