Thursday, April 10, 2008

நீ எழுந்து போன பின் (II)

உன்னால் உருவான
உலகம் இது
நீ வந்தால்
மட்டுமே இயங்கும்..


ஆய்வுக்கூடத்தில்
அதிகநேரம்
அமராதே
கணிணிகளும்
கண்ணடிக்கின்றன
கன்னி உன்னைக் கன்டு!





குளத்தங்கரைக்கு
குளிக்க வருகிறாய்
அழுக்கை தின்னும் மீன்கள்
இன்று அழகை தின்ன போகின்றன!




தினமும் தண்ணீர்
எடுக்க ஆற்றங்கரைக்கு
நீ வருவதால்,
வற்றாமல் ஓடுகிறது
என் காதல் நதி!

நீ பேருந்து ஏறி போன
பின்னும் நின்ற் கொண்டே
இருக்கிறது எனக்கான
உன் வெட்கம் மட்டும்..



மருதாணி இலைகளும்
சிவக்கின்றன
உன் விரல்
தீண்டல்களில்!

உன் கொலுசு
சிதறி விட்டு போன சத்தம்
என்னுள் கேட்டுகொண்டே இருக்கிறது
உன் கால்மிதி தடம்
அழியும்வரை..




தையல் படிக்க போகிறாய்
என்றுதான் நினைத்திருந்தேன்
எங்கே படித்தாய்
என் மனதை தைத்து விட்டு போக..





சூரியனை கண்டு
முகம் நிமிரும் சூரியகாந்தி,
உன்னை கண்டதும்
நிமிர்ந்து கொள்கிறது
என் காதல்..


நீ எழுந்து போன பின்
உன் இருக்கையில்
வாடிக்கிடக்கும்
உதிர்ந்த மல்லிகை பூக்கள் சொல்லும்
என் காதலை!



5 comments:

Ponraj said...

Simply super lyrics...

ராகவன் பாண்டியன் said...

நன்றி பொன்ராஜ்....

kannukkiniyal said...

hey ragavan thanks for posting my link and well wonderfull experssion of love here keep posting....

Anonymous said...

me Rohini friend.

unga lyrics.... all super...

yuvaraj said...

குளத்தங்கரைக்கு
குளிக்க வருகிறாய்
அழுக்கை தின்னும் மீன்கள்
இன்று அழகை தின்ன போகின்றன!

மிக அழகாக வரிகள் நன்பரே....