உன்னால் உருவான
உலகம் இது
நீ வந்தால்
மட்டுமே இயங்கும்..
ஆய்வுக்கூடத்தில்
அதிகநேரம்
அமராதே
கணிணிகளும்
கண்ணடிக்கின்றன
கன்னி உன்னைக் கன்டு!

குளத்தங்கரைக்கு
குளிக்க வருகிறாய்
அழுக்கை தின்னும் மீன்கள்
இன்று அழகை தின்ன போகின்றன!

தினமும் தண்ணீர்
எடுக்க ஆற்றங்கரைக்கு
நீ வருவதால்,
வற்றாமல் ஓடுகிறது
என் காதல் நதி!
நீ பேருந்து ஏறி போன
பின்னும் நின்ற் கொண்டே
இருக்கிறது எனக்கான
உன் வெட்கம் மட்டும்..
சிவக்கின்றன
உன் விரல்
தீண்டல்களில்!
உன் கொலுசு
சிதறி விட்டு போன சத்தம்
என்னுள் கேட்டுகொண்டே இருக்கிறது
உன் கால்மிதி தடம்
அழியும்வரை..
சிதறி விட்டு போன சத்தம்
என்னுள் கேட்டுகொண்டே இருக்கிறது
உன் கால்மிதி தடம்
அழியும்வரை..