நீதான் எந்தன் அழகிய ராட்சசியடி!

திட்டிக்கொண்டே இருக்கிறாய்...
திட்டிக்கொண்டே இருக்கிறாய்...
மூன்றாம் வருட இறுதி வரை நீ என்னுடன் பேசியதில்லை
என்றாலும்,உன் கண்கள் என்னுடன் பேசியவை அதிகம்! நான்
காத்திருப்பேன் என்பது தெரிந்தும் ,நான் பார்க்கும் முன் என்னை
தேடிவிட்டு,நான் பார்க்கும் போது என்னை இதுவரை பார்த்ததே
இல்லாதது போல் தலைகுனிந்து கொள்வாய்!
உடனடியாகவா வரவேண்டும் உன் வழித்தட பேருந்து?.. உன் தோழி என்னை காட்டி கிண்டலடிப்பதை பார்த்து அவளை முறைத்துவிட்டு,எதிர் வரும் உன் பேருந்தை பார்ப்பது போல் காத்திருந்ததற்க்கான பரிசாக பார்க்காதது போல் என்னயும் பார்த்துவிட்டு கிளம்பிவிடுவாய்!இவ்வளவு நேரம் காத்திருந்ததற்க்கு எதோ சாதித்த உணர்வோடு நானும் வீடு திரும்புவேன்...
நீ விட்டுப்போன வெட்கங்களையும்,பார்வைகளையும் கண்டெடுக்க கடந்த மாதம் நடந்த பட்டமளிப்பு விழாவிற்க்காக கல்லூரிக்கு சென்ற பொழுது,என் தம்பிகளிடம் இடம் கேட்டு அமர்ந்தேன் சின்னப்பாலம் மீது! நான்கு வழிச்சாலை வரும் காரணத்திற்காக சின்னப்பாலம் இடிக்கப்பட போவதாக கேள்விப்பட்டு வருத்தங்களோடு அமர்ந்திருக்கையில்,கவனிக்க முடிந்தது மற்றுமொரு காத்திருத்தலையும்,ஒரு மெளனமொழி உரையாடலையும் எனது இளைய தலைமுறையிடம்!
தினம் தினம்
அழகை அதிகரித்து கொள்கிறது
நகர பேருந்து
நீ ஏறி வருவதால்..........
சிரிக்கிறயா?
என்னை
சிதறடிக்கிறாயா?
உன் விழி
அம்புகள்
என் இதயத்தில் பாய்ந்தன...
உதிரமாக வழிகிறது
காதல்.......
தேர் உலாவால்
விழா ஊருக்கு.....
தேவதை உன் உலாவால்
திருவிழா எனக்கு...
உன்னை அலங்கரிப்பதாய்
நினைத்து கொள்கிறாய்
உண்மையில் தங்களை
அலங்கரித்து கொள்கின்றன
அணிகலன்கள்..
கோவிலை சுற்றுகிறாய்...
உன்னை சுற்றுகிறேன்...
நோக்கம் இருவருக்கும் ஒன்றுதான்
அம்மன் அருள்!
தூரத்தில் கடக்கும் போதும்
தூரல்களாய் உன் பார்வை
தளிர்க்கிறது என் காதல்..
உன்னோடு பேச
நான் கற்றுக்கொண்ட
ஒரே மொழி
மெளனம்.
சில நேரங்களில்
பார்வைகள்..
கொடி கட்டுவதற்காக
கொல்லையில் வளர்ந்தது
சாதாரன தென்னை தான்.
ஆனால் உன் தாவனி
காய்ந்ததில் காய்த்தது
அனைத்தும் செவ்விளனியே...